செய்திகள் (Tamil News)
விபத்து

திண்டுக்கல் அருகே கார் மோதி வனத்துறை அதிகாரி பலி

Published On 2019-08-15 08:51 GMT   |   Update On 2019-08-15 08:51 GMT
திருண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வனத்துறை அதிகாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை:

திண்டுக்கல் அருகே வடமதுரை மேற்குரத வீதியை சேர்ந்தவர் வீராச்சாமி(வயது62). இவர் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி.

சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த வீராச்சாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வடமதுரை போலீசார் செங்கனூத்து பட்டியை சேர்ந்த டிரைவர் பாண்டித்துரையிடம் விசாரித்து வருகின்றனர்.

அய்யலூர் அருகே கடவூர் பிரிவு பகுதியில் ஒரு ஆட்டோவில் 5 பேர் பயணம் செய்தனர். அப்போது 4 வழிச்சாலை அருகே மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ பைக்மீது மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். ஆட்டோக்கள் வேகமாக சாலை விதிகளை மதிக்காமல் வருவதே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags:    

Similar News