செய்திகள்

கும்பகோணம் லாட்ஜில் சென்னை வாலிபர் மர்ம மரணம்

Published On 2019-02-25 08:59 GMT   |   Update On 2019-02-25 08:59 GMT
கும்பகோணம் லாட்ஜில் சென்னை வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

சென்னை அம்பத்தூர் சிட்கோ நகரை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது41) என்பவர் கடந்த 22-ந்தேதி காலை கும்பகோணம் பஸ் நிலையம் அருகே ஜான் செல்வராஜ் நகரில் உள்ள தனியார் லாட்ஜில் வந்து தங்கி உள்ளார்.

அன்று மதியம் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்தார். பின்னர் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லையாம்.

நேற்று 24-ந்தேதி இரவு வரை அறையை விட்டு வெளியில் வராததால் கதவை தட்டியும் திறக்காததால் லாட்ஜ் உரிமையாளர் இதுபற்றி கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது துண்டு மட்டும் அணிந்த நிலையில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அருகில் மூச்சுத் திணறலுக்கு பயன்படுத்தும் மருந்து ஸ்பிரே கிடந்தது. அவரை உடைமைகளை பரிசோதித்ததில் அவர் சென்னையில் இருந்துதான் வந்து தங்கி இருந்தது தெரியவந்ததையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவர் மூச்சுத் திணறலில் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News