செய்திகள்

புழல் ஜெயிலில் அடைக்க சென்ற போது கொலைக் கைதியிடம் 40 போதை மாத்திரை பறிமுதல்

Published On 2019-01-25 10:23 GMT   |   Update On 2019-01-25 10:23 GMT
புழல் ஜெயலில் அடைக்க சென்ற போது கொலைக் கைதியிடம் இருந்து 40 போதை மாத்திரை மற்றும் 50 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்குன்றம்:

சென்னை அரும்பாக்கம் 5-வது பிரதான சாலையை சேர்ந்தவர் கார்த்திக் (25). கடந்த 23-ந்தேதி அரும்பாக்கத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் இவரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நேற்று மாலை கார்த்திக்கை புழல் ஜெயிலில் அடைக்க அழைத்து வந்தனர். ஜெயில் நுழைவாயிலில் இருந்த போலீசார் கார்த்திக்கை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 40 போதை மாத்திரைகளும், 50 கிராம் கஞ்சாவும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போதை மாத்திரை, கஞ்சா ஜெயிலுக்குள் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #PuzhalJail
Tags:    

Similar News