செய்திகள்
வடமதுரையில் லாரிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது
வடமதுரை அருகே டிப்பர் லாரிகளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள சந்தனவர்த்தினி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து வடமதுரை போலீசார் நேற்று ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது டிப்பர் லாரிகளில் 2 பேர் மணல் அள்ளி கடத்த முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். லாரிகளையும் பறிமுதல் செய்து கொண்டு வந்தனர். விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டது திண்டுக்கல் ராஜக்காபட்டியைச் சேர்ந்த பழனி முத்து (33), நாகல்நகரைச் சேர்ந்த துரைராஜ் என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.