செய்திகள்
பூந்தமல்லி மதுபான தொழிற்சாலையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை
பூந்தமல்லி தனியாருக்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையில் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தனியாருக்கு சொந்தமான மதுபான தொழிற்சாலை உள்ளது.
இதில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் இருந்து மதுபானங்கள் டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பப்படுகிறது.
நேற்று மாலை 2 கார்களில் வந்த 14 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த தொழிற்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் உரிமையாளர் ஆந்திராவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறையின் சோதனையில் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. அதிகாரிகள் சோதனை செய்தாலும் தொழிற்சாலையில் மது உற்பத்தி ஏதும் தடைபடவில்லை.
இந்த சோதனை நேற்று இரவு 10.30 மணி வரை நடந்தது. பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். #tamilnews
பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தனியாருக்கு சொந்தமான மதுபான தொழிற்சாலை உள்ளது.
இதில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் இருந்து மதுபானங்கள் டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பப்படுகிறது.
நேற்று மாலை 2 கார்களில் வந்த 14 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த தொழிற்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் உரிமையாளர் ஆந்திராவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறையின் சோதனையில் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. அதிகாரிகள் சோதனை செய்தாலும் தொழிற்சாலையில் மது உற்பத்தி ஏதும் தடைபடவில்லை.
இந்த சோதனை நேற்று இரவு 10.30 மணி வரை நடந்தது. பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். #tamilnews