செய்திகள்

டி.கல்லுப்பட்டி அருகே கல்குவாரியில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2018-11-29 10:41 GMT   |   Update On 2018-11-29 10:41 GMT
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே கல்குவாரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேரையூர்:

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேலம்பட்டி பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் முத்துக்குமார் (வயது 25). இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற ஆறுமுகம் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

அப்போது தேவங்குறிச்சி மலையடிவாரத்தில் உள்ள கல்குவாரியில் அவரது ஆடைகள் மட்டும் இருந்தது. இதைப்பார்த்த உறவினர்கள் உடனே டி.கல்லுப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கல்குவாரியில் இறங்கி தேடிப்பார்த்தனர். அப்போது ஆறுமுகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கல்குவாரியில் குளிக்கச் சென்றிருந்தபோது ஆறுமுகம் மூழ்கி பலியாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News