செய்திகள்

மதுரையில் மேஸ்திரி வீட்டுக்குள் புகுந்து நகை-பணம் கொள்ளை

Published On 2018-09-29 12:21 GMT   |   Update On 2018-09-29 12:21 GMT
மதுரையில் மேஸ்திரி வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை தாசில்தார் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது47). கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

ஊர் திரும்பிய குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை-பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வாழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News