செய்திகள்

தருமபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பேரணி

Published On 2018-09-21 14:39 GMT   |   Update On 2018-09-21 14:39 GMT
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலை நகரங்களில் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. 

இதையொட்டி தருமபுரி மாவட்ட மையம் சார்பில் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். 

இவர்கள் பி.எஸ்.என்.ல். அலுவலகம் வரை பேரணியாக சென்று பேரணியை முடித்தனர்.
Tags:    

Similar News