செய்திகள்

கள்ளிக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி

Published On 2018-09-21 10:00 GMT   |   Update On 2018-09-21 10:00 GMT
கள்ளிக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

விருதுநகர் பாலவநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 58) வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் மதுரைக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி 4 வழிச்சாலையில் அழகர்சாமி சென்றபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அழகர்சாமி இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில், கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News