செய்திகள்

திருப்பதி குடை ஊர்வலத்தில் நெரிசலில் சிக்கி பெண் பலி

Published On 2018-09-12 08:42 GMT   |   Update On 2018-09-12 08:42 GMT
திருப்பதி குடை ஊர்வலம் சூளை ரவுண்டானா அருகே வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியானார். #Tirupatithirukudai
போரூர்:

சென்னை, மேற்கு சைதாப்பேட்டை சுப்பிரமணி சாலை, ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா (வயது 58). இவர் நேற்று நடைபெற்ற திருப்பதி குடை ஊர்வலத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

சூளை ரவுண்டானா அருகே ஊர்வலம் வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கிய லலிதா திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் லலிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். #Tirupatithirukudai

Tags:    

Similar News