செய்திகள்

கிறிஸ்தவர்களின் புனித பயணத்திற்கு அரசு மானியம் பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2018-08-27 10:11 GMT   |   Update On 2018-08-27 10:11 GMT
கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு அரசு மானியம் பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய கல்வி மனைகளின் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்ட கண்காணிப்பாளர் திபு முன்னிலை வகித்தார். விழாவிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் ஜெயதாஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. உள்ளது. அரசு மானியத்துடன் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு அனுமதி அளித்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர்கள் வேளாங்கன்னி செல்வதற்கு தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் பேருந்தை திருச்செந்தூரிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளியாகும். இங்கு விடுதியில் தங்கி பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு சார்பில் 300 பேருக்கு ஆயிரம் கிலோவிற்கு மேல் அரிசி மற்றும் கோதுமை உணவு பொருளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வழங்கிவிட்டு இந்த ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள இங்கு வந்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News