செய்திகள்
தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை
மீன்பிடிக்க சென்ற தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் திரும்பி வராதது குறித்து விசாரணை நடத்தியதில், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. #TNFishermen
தூத்துக்குடி:
இதுபற்றி விசாரித்த போது இலங்கை கடல் எல்லை பகுதியில் அவர்கள் மீன்பிடித்ததாக கூறி அங்குள்ள கடற்படையினர் சிறை பிடித்தது தெரியவந்தது. இலங்கையில் வத்தலக்குண்டு என்ற இடத்தில் வைத்து கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபற்றி தூத்துக்குடியில் உள்ள அவர்களது உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்’ என்றனர். #TNFishermen