செய்திகள்

உத்தமபாளையம் அருகே வீட்டை உடைத்து பணம் கொள்ளை

Published On 2018-08-14 11:17 GMT   |   Update On 2018-08-14 11:17 GMT
உத்தமபாளையம் அருகே வீட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

உத்தமபாளையம் தாமஸ் காலனியை சேர்ந்தவர் அந்தோணிபிச்சை. இவர் தனது மனைவி சகாயசீலாவுடன் வெளியூர் சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் பணம், செல்போன், டி.வி. ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் அருகில் இருந்த மற்றொரு வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது. இது குறித்தும் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News