செய்திகள்

சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம் பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2018-08-13 12:15 GMT   |   Update On 2018-08-13 12:15 GMT
சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது. #Powercut

கோவை:

கோவை சீரநாயக்கன் பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சீரநாயக்கன் பாளையம், பாப்பநாயக்கன் புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம் (ஒரு பகுதி), செல்வபுரம், கலிக்க நாயக்கன்பாளையம், பூச்சியூர், மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, குளத்துப்பாளையம், தீத்திப்பாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம், தேவராயபுரம், தொண்டா முத்தூர், முத்திபாளையம், புத்தூர், தென்னம நல்லூர், போளு வாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், ஜாகீர்நாயக்கன் பாளையம், கெம்பனூர் காளியண்ணன்புதூர் ஆகிய பகுதிகளில் 14- ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை சீர நாயக்கன் பாளையம் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News