செய்திகள்

அய்யம்பாளையத்தில் மது விற்றவர் கைது

Published On 2018-08-06 11:49 GMT   |   Update On 2018-08-06 11:49 GMT
அய்யம்பாளையத்தில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

வேலாயுதம்பாளையம்:

நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அய்யம்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக அரசு டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அய்யம்பாளையம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணியை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News