செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கை- கலெக்டர் தகவல்

Published On 2018-07-26 11:17 GMT   |   Update On 2018-07-26 11:17 GMT
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு சேர்வதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அனைத்து மாணவ- மாணவிகளுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படுகிறது. வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படுகிறது.

3 ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.எனவே கலை ஆர்வமுள்ள மாணவ- மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியை மாவட்ட அரசு இசைப்பள்ளி, குரூஸ் புரம் சமுதாய நலக்கட்டிடம், தூத்துக்குடி என்ற முகவரியிலும் தொலைபேசி எண் 0461 - 2300605 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News