செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2018-07-10 06:55 GMT   |   Update On 2018-07-10 06:55 GMT
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. #ThermalPowerStation

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல்நிலை மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 வாட்சும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் முதல் நிலை இரண்டாம் அலகில் பராமரிப்பு காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டு நிலைகளில் 1020 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது. #ThermalPowerStation

Tags:    

Similar News