செய்திகள்

திசையன்விளை அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்

Published On 2018-05-17 16:21 GMT   |   Update On 2018-05-17 16:21 GMT
திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து அப் பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரையும் இளம்பெண்ணையும் தேடி வருகிறார்கள்.
திசையன்விளை:

ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மகேந்திரன் (வயது18). இவரின் அக்காள் தங்கமாரி என்பவர் திசையன்விளை அருகே உள்ள உபகார மாதா புரத்தில் வசித்து வருகிறார். மகேந்திரன் அடிக்கடி அக்காள் தங்கமாரி வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள 17 வயது இளம்பெண்ணுடன் மகேந்திரன் நெருங்கி பழகினார். இதை அறிந்த இளம்பெண்ணின் தந்தை மாணவியை வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பினார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது மகேந்திரனும் அங்கு சென்றுள்ளார். அவர் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி வெளியூருக்கு கடத்தி சென்றார். மகளை காணாத இளம்பெண்ணின் தந்தை திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனையும், இளம்பெண்ணையும் தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News