செய்திகள் (Tamil News)
நடராஜன் உடல் பெசன்ட் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
சென்னையில் இன்று காலமான சசிகலா கணவர் நடராஜனின் உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு, காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என கூறப்படுகிறது. #RIPNatarajan #Sasikala
சென்னை:
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 17-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த டி.டி.வி தினகரன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் உள்ளார்.
இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக இன்று நள்ளிரவு 1:35 மணியளவில் அவர் மரணமடைந்தார். இதையடுத்து நடராஜனின் உடல் எம்பால்மிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நடராஜனின் உடல் எம்பால்மிங் செய்து முடித்த நிலையில் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகர் இல்லத்தில் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. #RIPNatarajan #Sasikala #tamilnews
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 17-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த டி.டி.வி தினகரன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் உள்ளார்.
இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக இன்று நள்ளிரவு 1:35 மணியளவில் அவர் மரணமடைந்தார். இதையடுத்து நடராஜனின் உடல் எம்பால்மிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நடராஜனின் உடல் எம்பால்மிங் செய்து முடித்த நிலையில் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகர் இல்லத்தில் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. #RIPNatarajan #Sasikala #tamilnews