செய்திகள்
மரக்காணம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் மர்ம மரணம்
மரக்காணம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் மர்மமான முறையில் இருந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள செட்டிநகர் கடற்கரைஓரம் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இங்கு ஆந்திராவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
ஆந்திராவை சேர்ந்த ராம்பாபு(வயது22) என்பவரும் அங்கு தங்கி இருந்து வேலைபார்த்து வந்தார். நேற்று அவர் வழக்கம் போல் இறால் பண்ணைக்கு வேலைக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்தபோது ராம்பாபுக்கு திடீரென்று மூச்சுதிறணல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் ராம்பாபு இறந்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews