செய்திகள்

இரணியலில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பட்டதாரி பெண் மாயம்

Published On 2017-08-19 16:12 GMT   |   Update On 2017-08-19 16:12 GMT
இரணியலில் பட்டதாரி பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.

இரணியல்:

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை களியங்காடு விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 45). இவரது மகள் மெரினா சாம்லின் (22). பி.எஸ்.சி. பட்டதாரி.

இவர் கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அப்போது கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமாகி இருந்தார். அதில் மன நிம்மதி இல்லாமல் தவிப்பதாகவும் மன நிம்மதி தேடி செல்வதாகவும் கூறியிருந்தார்.

இந்த கடிதத்தை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மெரினா சாம்லினை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து இரணியல் போலீசில் சாம்ராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மெரினாசாம்லினை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து வந்தது தெரிய வந்தது. தற்பொழுது அந்த வாலிபரும் மாயமாகி உள்ளார்.

எனவே மெரினா சாம்லினை அந்த வாலிபர் அழைத்துச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News