செய்திகள்

புழல் ஜெயிலில் இருந்து இலங்கை மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு

Published On 2017-08-01 07:13 GMT   |   Update On 2017-08-01 07:13 GMT
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததால், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கை மீனவர்கள் நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர்.
செங்குன்றம்:

நாகப்பட்டினம் அருகே கடந்த மே மாதம் கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் பிரதீபன், யுகவரதன் ஆகிய 2 பேரை தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து புழல் ஜெயிலில் உள்ள 2 இலங்கை மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு இலங்கை மீனவர்கள் பிரதீபன், யுகவரதன் ஆகிய இருவரும் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் உடனடியாக ராமேசுவரத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர்கள் படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

Tags:    

Similar News