செய்திகள்

எனது பெயரில் மன்றங்களை அமைத்து அந்நியபடுத்தி விடாதீர்கள் - தொண்டர்களுக்கு பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Published On 2017-05-21 10:43 GMT   |   Update On 2017-05-21 11:19 GMT
எனது பெயரில் மன்றங்களை அமைத்து அந்நியபடுத்தி விடாதீர்கள் என்று தொண்டர்களுக்கு பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், எனது பெயரில் மன்றங்களை அமைத்து எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அந்நியபடுத்தி விடாதீர்கள் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், அதிமுகவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும், மன்றங்களும் மட்டும்தான் செயல்பட வேண்டும் என்று  பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, பன்னீர் செல்வம் அணி சிறிய அணி என்று திண்டுக்கல் சீனிவாசன்,ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
Tags:    

Similar News