செய்திகள்

ராஜபாளையத்தில் பள்ளி மாணவி தீக்குளித்து பலி

Published On 2017-04-25 12:19 GMT   |   Update On 2017-04-25 12:19 GMT
ராஜபாளையத்தில் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமாரி, நெசவுத்தொழிலாளி. இவரது மகள் விஜயலட்சுமி (14) ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். விஜயலட்சுமியின் தந்தை 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

நேற்று ஜெயமாரி, வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் தனியாக இருந்த மாணவி விஜயலட்சுமி கதவை உள்புறமாக பூட்டிவிட்டு தீக்குளித்தார். உடல் கருகிய அவரை 108 ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தாயார் ஜெயமாரி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News