செய்திகள்

முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்யுங்கள்: காங்கிரஸ் வேண்டுகோள்

Published On 2017-04-24 15:09 GMT   |   Update On 2017-04-24 15:09 GMT
விவசாயிகளின் நலன் காக்க நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி:

மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் நலன் காக்க அவர்களின் ஜீவா தார கோரிக்கைகள் நிறைவேற நாளை 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைமையேற்று நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், சமூகநல அமைப்புகளும், அனைத்து தொழிற்சங்கங்களும், வியாபார பெருமக்களும், பஸ் மற்றும் லாரி உரிமையாளர்களும், கல்வி நிறுவனங்களும், தனியார் தொழிற்சாலை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து உணர்வு பூர்வமாக பங்கேற்று முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்தந்த பகுதியில் உள்ள தி.மு.க. மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, முழு அடைப்பு போராட்டத்தில் தவறாமல் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்க முழு மூச்சுடன் செயலாற்றுமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டு கொக்கிறேன்.

இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார்.

Similar News