செய்திகள்

ஜோலார்பேட்டையில் நிச்சயதார்த்த பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது

Published On 2017-04-24 12:12 GMT   |   Update On 2017-04-24 12:12 GMT
ஜோலார்பேட்டையில் நிச்சயதார்த்த நடக்க உள்ள பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ஜெ.என்.ஆர்.நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் முகேஷ் (வயது 24). வக்கணம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று (திங்கட்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று முகேஷ் நிச்சயதார்த்தம் நடக்க உள்ள பெண்ணையும், வாலிபரையும் போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பிறகு பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று பெண்ணையும், அவரது தந்தையையும் கொலை செய்துவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகேஷை கைது செய்தனர்.

Similar News