செய்திகள்

வெங்கல் அருகே அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்: வாலிபர் கைது

Published On 2017-04-24 09:38 GMT   |   Update On 2017-04-24 09:38 GMT
வெங்கல் அருகே அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள ஆவாஜிபேட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி அரசு பஸ் சென்றது. டிரைவர் ராஜேந்திர பிரசாத் வண்டியை ஓட்டினார். எறையூர் அருகே சென்ற போது சாலையோரம் பேனர் வைப்பதற்காக வாலிபர்கள் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றனர்.

இதனை டிரைவர் ராஜேந்திர பிரசாத் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் ராஜேந்திர பிரசாத்தை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் அவரது கை உடைந்தது. அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் பணிமனையில் நேற்று போக்குவரத்து ஊழியர்கள் பஸ்சை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பணிமனை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். டிரைவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதற்கிடையே டிரைவரை தாக்கியதாக ஒடிக்காடு கிராமத்தை சேர்ந்த சூர்யாவை கைது செய்தனர்.

Similar News