செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 461 போலீசார் இடமாற்றம்: போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

Published On 2017-04-20 12:46 GMT   |   Update On 2017-04-20 12:47 GMT
விருதுநகர் மாவட்டத்தில் 461 போலீஸ்காரர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்.

விருதுநகர்:

தமிழகத்தில் மாவட்ட வாரியாக நீண்ட காலமாக ஓரே இடத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள், ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்கள் என 461 பேர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் பிறப்பித்துள்ளார்.

Similar News