செய்திகள்

கோவில்பட்டி பகுதியில் திருட்டி சி.டி. விற்றவர் கைது

Published On 2017-03-25 15:07 GMT   |   Update On 2017-03-25 15:07 GMT
கோவில்பட்டி பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது திருட்டி சி.டி. விற்றவரை கைது செய்தனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி பகுதியில் அதிக அளவு திருட்டி சி.டி.க்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

படலையூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு 146 புதுப்பட சி.டி.கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் கோவில்பட்டி திருவள்ளுவர் நகர் 1-வது தெருவை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரை கைது செய்தனர்.

Similar News