செய்திகள்

இரணியல் ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2017-03-25 14:35 GMT   |   Update On 2017-03-25 14:35 GMT
குடும்ப பிரச்சனையில் புதுமாப்பிள்ளை ரெயில் முன் பாயிந்த தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரணியல்:

இரணியல் ரெயில் நிலையத்தையொட்டி ரெயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கை, கால்கள் துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பூபதி, ஏட்டு குமார்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேரந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் இரணியல் மேலத் தெரு சுரங்கன்விளையை சேர்ந்த சுபாஷ் (வயது 30). கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுபாஷ் பலியான தகவலை கேட்டதும் அவரது மனைவி அஜிதா கதறி அழுதார். சுபாசுக்கும் அஜிதாவுக்கும் திருமணம் ஆகி 9 மாதங்களே ஆகிறது.

கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் சுபாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

Similar News