செய்திகள்

மின்தடையால் நோயாளிகள் மரண சம்பவம்: அமைச்சர் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-23 10:19 GMT   |   Update On 2017-03-23 10:19 GMT
மின்தடையால் நோயாளிகள் மரணம் அடைந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக கோரி மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:

மக்கள் தலைவர் வ.சுப்பையா மக்கள் இயக்கத்தின் சார்பில் இன்று காலை அண்ணாசாலை- ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இயக்க துணைத்தலைவர் பழனி தலைமை தாங்கினார். இயக்க செயலாளர்கள் சரவணன், பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்க பொதுசெயலாளர் ஆனந்து, மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ, மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், இயக்க நிர்வாகிகள் பன்னீர் செல்வம், தாஸ், பொன்னுசாமி, செல்வகுமார், சரவணன், ஆல்பர்ட், விஜயன், பிரசன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கல்வி நிலைக்கேற்ப புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். போதை பொருள் விற்பனையை தடை செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகளை அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.

மின்தடையால் மரணம் அடைந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Similar News