செய்திகள்

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பாரதீய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-20 13:14 GMT   |   Update On 2017-03-20 13:14 GMT
குமரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பாரதீய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குழித்துறை:

குமரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை ஆழப்படுத்த வேண்டும், நீர் ஆதாரங்களை தூர்வாரி அதிகளவு தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பாரதீய ஜனதா சார்பில் இன்று குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குழித்துறை நகரம் மற்றும் மேல்புறம் ஒன்றிய பாரதீய ஜனதா சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை தலைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் குழித்துறை நகர தலைவர் பக்தசிங், முன்னாள் கவுன்சிலர்கள் ரெத்தினமணி, பிஜு உள்பட திரளான பாரதீய ஜனதாவினர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Similar News