செய்திகள்
அரூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
அரூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் வாலிபரிடம் இருந்த 7 பொட்டலம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர், சுபேதார் மேடு பகுதியை சேர்ந்தவர் சாதிக் (வயது 38).
இவர் அம்பேத்கார் நகர் பாலம் அருகே கஞ்சா விற்பதாக அரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சாதிக்கை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவரிடம் 7 பொட்டலம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்து, வாலிபர் சாதிக்கையும் கைது செய்தனர்.
இதேப்போல் மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 280 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி மாவட்டம் அரூர், சுபேதார் மேடு பகுதியை சேர்ந்தவர் சாதிக் (வயது 38).
இவர் அம்பேத்கார் நகர் பாலம் அருகே கஞ்சா விற்பதாக அரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சாதிக்கை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவரிடம் 7 பொட்டலம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்து, வாலிபர் சாதிக்கையும் கைது செய்தனர்.
இதேப்போல் மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 280 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.