செய்திகள்

மதுரை சிந்தாமணியில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை திருடிய வாலிபர் கைது

Published On 2017-03-20 10:18 GMT   |   Update On 2017-03-20 10:18 GMT
மதுரை சிந்தாமணியில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அவனியாபுரம்:

மதுரை சிந்தாமணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி அன்னகாமு (வயது 44). நேற்று இரவு கதவை சாத்திவிட்டு கணவன்-மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமி நைசாக வீட்டில் புகுந்து அன்னகாமு கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்தார். அப்போது திடுக் கிட்டு எழுந்த அன்னகாமு நகையை இறுக்கி பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

உஷாரான திருடன் அங்கிருந்து தப்ப முயன்றான். இதில் 1¼ பவுன் நகையோடு திருடன் தப்பினான். ¾ பவுன் நகை அன்னகாமு கையில் சிக்கியது.

கொள்ளை சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், ஏட்டுகள் தமிழ்ச் செல்வம், மாலா, முனியாண்டி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது நகையை திருடியது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (24) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.

Similar News