செய்திகள்
பழனியில் இடி- மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை
பழனியில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் வாட்டிவந்த நிலையில், நேற்று பகல் 4மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்தது. மாலை 6மணிக்கு மேல் இடி மின்னலுடன் பலத்த மழை 40 நிமிடங்கள் பெய்தது.
பழனி:
பழனியில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் வாட்டிவந்த நிலையில், நேற்று பகல் 4மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்தது. மாலை 6மணிக்கு மேல் இடி மின்னலுடன் பலத்த மழை 40 நிமிடங்கள் பெய்தது.
இதனால் ரோடுகளில் மழைநீர் வெள்ளமென தேங்கியது. பஸ்நிலையம், ரவுண்டானா, காந்திரோடு போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றனர்.
பழனி மலைக்கோவிலில் மழை காரணமாக ரோப்கார் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, மழைநின்ற பின் மீண்டும் இயக்கப்பட்டது. அதே போல் மழைகாரணமாக மலைக்கோவிலில் மழைநின்ற பின்னே தங்கரதம் புறப்பாடு நடைபெற்றது.