செய்திகள்
நன்னிலம் அருகே சைக்கிளில் வெளியில் சென்ற வாலிபர் மாயமானார். இது குறித்து அவரது தம்பி போலீசில் புகார் அளித்துள்ளார்.
நன்னிலம்:
நன்னிலம் அருகே உள்ள பெரும்புகளூரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் அருளானந்தம் (26).கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அருளானந்தம் தம்பி ராமமூர்த்தி நன்னிலம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.