செய்திகள்

புதுவையில் சாரல் மழை

Published On 2017-01-27 09:42 GMT   |   Update On 2017-01-27 09:42 GMT
புதுவையில் இன்று காலையும் மழை தூறிக்கொண்டே இருந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் புதுவையில் சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையும் மழை தூறிக்கொண்டே இருந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Similar News