செய்திகள்
சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் ஓடும்
சுரங்க வழித்தடங்களில் பயணிகள் சேவைகள் விரைவில் துவங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல்கட்ட செயல்பாடுகளில் கணிசமான முன்னேற்றத்தை தமிழ்நாடு அடைந்துள்ளது. சின்னமலை- விமான நிலையம் இடையேயான உயர்த்தப்பட்ட வழித் தடத்திலும், ஆலந்தூர்- பரங்கிமலை இடையேயான உயர்த்தப்பட்ட வழித்தடத்திலும் பயணிகள் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சுரங்க வழித்தடங்களில் பயணிகள் சேவைகள் விரைவில் துவங்கப்படும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டப்பட்ட வண்ணாரப்பேட்டைக்கும், திருவொற்றியூர், விம்கோ நகருக்கும் இடையேயான முதல் கட்டத்தின் நீட்டிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்த அரசின் பரிசீலனையில் உள்ளது.
சுரங்க வழித்தடங்களில் பயணிகள் சேவைகள் விரைவில் துவங்கப்படும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டப்பட்ட வண்ணாரப்பேட்டைக்கும், திருவொற்றியூர், விம்கோ நகருக்கும் இடையேயான முதல் கட்டத்தின் நீட்டிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்த அரசின் பரிசீலனையில் உள்ளது.