செய்திகள்

பழனியில் மின்சாரம் தாக்கி ஓமியோபதி டாக்டர் பலி

Published On 2017-01-20 09:58 GMT   |   Update On 2017-01-20 09:58 GMT
பழனியில் மின்சாரம் தாக்கி ஓமியோபதி டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி:

பழனி அடிவாரம் தெற்கு கிரிவீதி சாதுசுவாமிகள் மடம் அருகே குடியிருப்பவர் மருதுபாண்டி (வயது 65).ஓமியோபதி டாக்டர். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், ரஜேஷ்வரன், கதிரேசன், நாகராஜ் என்ற 3 மகன்களும் உள்ளனர்.

நேற்று பகல் வீட்டில் இருந்த மருதுபாண்டி தரையில் அமர்ந்து மின்சார தேய்ப்பு பெட்டிமூலம் தனது துணிகளை தேய்த்துக் கொண்டிருந்தார். மின்சார தேய்ப்பு பெட்டி மிக பழையதாக இருந்ததால் தேய்த்துக் கொண்டிருந்த போது மருது பாண்டியை மின்சாரம் தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.

பிரேதபரிசேதனைக்காக மருதுபாண்டியின் உடல் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News