செய்திகள்
ரவி

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் விவசாயி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published On 2017-01-16 09:26 GMT   |   Update On 2017-01-16 09:26 GMT
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:

பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருகிறது.

இதனால் மனம்உடைந்த விவசாயிகள் மயங்கி விழுந்து மரணம் அடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கொட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 53), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் அதிக அளவு செலவு செய்து உளுந்து மற்றும் மணிலா பயிர்களை சாகுபடி செய்திருந்தார்.

இந்த நிலையில் ரவி தனது விவசாய நிலத்துக்கு சென்றார். அங்கு தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்களை பார்த்ததும் மனவேதனையடைந்தார். உடனே அவர் கீழே மயங்கி விழுந்தார்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ரவி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Similar News