செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலி

Published On 2017-01-13 12:06 GMT   |   Update On 2017-01-13 12:06 GMT
கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை:

கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்தவர் குட்டப்பன் (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வசந்தகுமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குட்டப்பன் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இது குறித்து வசந்தகுமரி ஒத்தபாலம் போலீசில் கணவரை கண்டு பிடித்து தரும்படி புகார் செய்து இருந்தார்.

இந்தநிலையில் கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா எஸ்டேட் நீராற்றில் ஒருவர் பிணமாக கிடப்பதாக வால்பாறை போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த குட்டப்பன் என்பது தெரிய வந்தது. பின்னர் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து குட்டப்பன் உடலை அவரது மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Similar News