செய்திகள்

மேலூர் அருகே 30 பவுன் நகை கொள்ளை

Published On 2017-01-08 13:16 GMT   |   Update On 2017-01-08 13:16 GMT
வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

மேலூர்:

மேலூர் அருகே உள்ள கணபதியாபுரத்தை சேர்ந்தவர் சங்கரபாண்டி. சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா (வயது 40), 2 மகன்களுடன் இங்கு வசித்து வருகிறார்.

இவர், நேற்று உறவினர்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

இன்று காலை வீடு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், பூர்ணிமாவுக்கு தகவல் கொடுத்தனர்.  மேலூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன், சப்- இன்ஸ்பெக்டர் மார்ட்டின் வில்லியம், தனிப்பிரிவு ஏட்டு வீரணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பழனியில் இருந்து வீடு திரும்பிய பூர்ணிமா, போலீசில் கொடுத்த புகாரில் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News