செய்திகள்

கடைகள் அடைப்பு, தியேட்டர்கள் மூடல் - வெறிச்சோடி கிடக்கும் சென்னை

Published On 2016-12-05 15:29 GMT   |   Update On 2016-12-05 15:28 GMT
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சென்னையில் தியேட்டர்கள் மூடப்பட்டன.
சென்னை:

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து இன்று மாலை தவறான தகவல் வெளியானதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

செய்தி வெளியான சில நொடிகளிலேயே தமிழகம் முழுவதும், கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது. மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என அனைத்தும் மூடப்பட்டது.

குறிப்பாக சென்னையில் உடனடியாக அனைத்து கடைகளும் மூடப்பட்டதோடு, வாகனங்களில் சென்று கொண்டிருந்த மக்களும் உடனடியாக வீடுகளுக்கு திரும்பினர். பெரும்பாலான அரசு பேருந்துகள் உடனடியாக போக்குவரத்து பணிமனைக்கு திருப்பி விடப்பட்டது.

பதட்டமான சூழல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது. இதனால், சென்னையே வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 8 மணிக்கு சென்னையில் மயான அமைதி நிலவியது. அதேபோல், பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

Similar News