செய்திகள்

மழை- பனிமூட்டம்: சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 48 விமானங்கள் தாமதம்

Published On 2016-12-03 14:32 GMT   |   Update On 2016-12-03 14:32 GMT
மழை மற்றும் பனிமூட்டம் ஆகியவற்றால் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லக்கூடிய 48 விமானங்கள் தாமதமாகின.
சென்னை:

வடமாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்படுகிறது. குறிப்பாக டெல்லியில், சாலையில் எதிரே வருவோர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ரெயில்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. இதேபோல் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடா புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. காலையில் பனி மூட்டமும் காணப்படுகிறது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 48 விமானங்கள் தாமதமாகின.

Similar News