செய்திகள்

கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கு பயிற்சி

Published On 2016-11-28 14:29 GMT   |   Update On 2016-11-28 14:29 GMT
தமிழக அரசு அறிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 போட்டித் தேர்வுக்குரிய இலவசப்பயிற்சி வகுப்புகள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன.
கரூர்:

கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அவ்வப்போது வெளிவரும் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.

அவ்வாறே தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 போட்டித் தேர்வுக்குரிய இலவசப்பயிற்சி வகுப்புகள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன. எனவே, இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து விண்ணப்பத் தாரர்களும் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த ஆதாரத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்து உள்ளார்.

Similar News