செய்திகள்

கிருமாம்பாக்கத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை

Published On 2016-11-03 13:11 GMT   |   Update On 2016-11-03 13:11 GMT
கிருமாம்பாக்கத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

புதுவை கிருமாம்பாக்கம் காலனி தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது54). இவர் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உடைய இவருக்கு நீரழிவு நோயும் இருந்து வந்தது.

இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். அதிகம் மது குடித்து வந்ததாலும் நீரிழிவு நோய் பாதிப்பினால் நாராயணசாமி கடும் அவதி அடைந்து வந்தார். இதனால் மனமுடைந்த நாராயணசாமி நேற்று இரவு வீட்டில் அனைவரும் துங்கிய நிலையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நாராயணசாமிக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News