செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்: 250 படகுகள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2016-10-26 14:17 GMT   |   Update On 2016-10-26 14:17 GMT
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர். இன்று திடீரென விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர். இன்று திடீரென விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 250 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.

தூத்துக்குடி விசைப்படகு  மீனவர்கள் பிரச்சினையில் வெளிநபர்கள் தலையீடு இருப்பதாகவும், இதில் மீனவர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

Similar News