செய்திகள்
சேலம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் மாயம்
சேலம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் பெருமாம்பட்டியை அடுத்த சின்ன கஞ்சமலை, அருகே உள்ள கணவாய்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் வெங்கடேஷ் (16).இவன் கொண்டலாம்பட்டியை அடுத்த நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான்.
நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற அவன், மாலையில் வெகு நேரமான பிறகும் வீடு திரும்பவில்லை. அவன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசை தேடி வருகிறார்கள்.