செய்திகள்

தென்காசி அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2016-10-24 16:10 GMT   |   Update On 2016-10-24 16:10 GMT
தென்காசி அருகே வீட்டில் படித்திருந்த விவசாயியை நல்ல பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை:

தென்காசி அருகே உள்ள இலத்தூரை அடுத்த பலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது50), விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் படுத்து இருக்கும் போது, நல்ல பாம்பு கடித்தது.

இதில் உயிருக்கு போராடிய அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News