செய்திகள்

சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கிளை சிறைச்சாலைக்கு 129 கைதிகள் மாற்றப்பட்டனர்

Published On 2016-10-24 10:18 GMT   |   Update On 2016-10-24 10:19 GMT
சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கிளை சிறைச்சாலை செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, புழல் சிறையில் இருந்த 129 கைதிகளும் பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டனர்.
சென்னை:

சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் உள்ள கிளை சிறைச்சாலை பழுதானதை தொடர்ந்து 2014-ம் ஆண்டு அதனை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி சிறையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இதனால் அங்கிருந்த 129 சிறை கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் கொலை முயற்சி, திருட்டு வழிப்பறி வழக்குகளில் கைதானவர்கள். இவர்கள் புழல் சிறையில் விசாரணை கைதிகள் இருக்கும் அறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறை புதுப்பிக்கும் பணி முடிந்து நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்த 129 கைதிகளும் சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டனர். நேற்று மாலை 3 வேன்களில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சைதாப்பேட்டை கிளை சிறையில் அனைவரும் அடைக்கப்பட்டனர்.

Similar News